இலங்கையில் நேற்று மேலும் 132 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
நேற்று உயிரிழந்தவர்களில் 66 ஆண்கள் மற்றும் 66 பெண்கள் அடங்குகின்றனர். இவா்களில் 101 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவார். 30 முதல் 59 வயது வரையான 28 பேரும் 30 வயதுக்குட்பட்ட 3 பேரும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.
இவற்றுடன் கொரோனா தொற்றால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,699 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை